Friday, 2 October 2015

இனியெல்லாம் ஜெயமே..

சோகமா 
அழுதுகொள்.
சந்தோஷமா 
விழுதுகொள்.
பிரச்சினையா
பழுதுகொள்.
ஆதியில்
ஆண்டவனை
தொழுதுகொள்.
அந்தத்தில்
வெற்றியை
தழுவிக்கொள்.
சோகமா 
அழுதுகொள்.
சந்தோஷமா 
விழுதுகொள்.
பிரச்சினையா
பழுதுகொள்.
ஆதியில்
ஆண்டவனை
தொழுதுகொள்.
அந்தத்தில்
வெற்றியை
தழுவிக்கொள்.
நில், கவனி, எழுது.
எழுத்துகள்
பெண்ணினம் ஆனால்
கவிதைகள் 
உலகினம்
ஆகின்றன.
மாத்தி யோசி.
விழுந்தால்
ஜனனமும்
முடிவாகும்.
வாழ்ந்தால்
மரணமும்
தொடக்கமாகும்.

Tuesday, 7 April 2015

கை கடித்த தெய்வம்.

கொடுத்த தெய்வம்
கூரையைப் பிரிச்சி
கொடுத்தது.
கிடைத்தது
கூரை கட்டவே
சரியாய்ப் போயிற்று.

Tuesday, 10 March 2015

இரவு

இறுதியில் 
விடியலைக்
காணாமலே 
இறந்துபோனது 
இரவு.

Friday, 20 February 2015

ஒரு மெல்லிய கோடு.

வல்லிய
மூச்சுக்காற்றின்
உஷ்ணத்தின் எதிரில்
தள்ளிய நுரையின்
குமிழ்கள் ஒவ்வொன்றாய்
உடைந்துவர....
பாம்புக்கும்
தவளைக்கும்
நடுவில் இருந்தது....
ஒரு மெல்லிய கோடு.