கனவுப்பட்டறை
Friday, 2 October 2015
இனியெல்லாம் ஜெயமே..
சோகமா
அழுதுகொள்.
சந்தோஷமா
விழுதுகொள்.
பிரச்சினையா
பழுதுகொள்.
ஆதியில்
ஆண்டவனை
தொழுதுகொள்.
அந்தத்தில்
வெற்றியை
தழுவிக்கொள்.
சோகமா
அழுதுகொள்.
சந்தோஷமா
விழுதுகொள்.
பிரச்சினையா
பழுதுகொள்.
ஆதியில்
ஆண்டவனை
தொழுதுகொள்.
அந்தத்தில்
வெற்றியை
தழுவிக்கொள்.
நில், கவனி, எழுது.
எழுத்துகள்
பெண்ணினம் ஆனால்
கவிதைகள்
உலகினம்
ஆகின்றன.
மாத்தி யோசி.
விழுந்தால்
ஜனனமும்
முடிவாகும்.
வாழ்ந்தால்
மரணமும்
தொடக்கமாகும்.
Tuesday, 7 April 2015
கை கடித்த தெய்வம்.
கொடுத்த தெய்வம்
கூரையைப் பிரிச்சி
கொடுத்தது.
கிடைத்தது
கூரை கட்டவே
சரியாய்ப் போயிற்று.
Tuesday, 10 March 2015
இரவு
இறுதியில்
விடியலைக்
காணாமலே
இறந்துபோனது
இரவு.
Friday, 20 February 2015
ஒரு மெல்லிய கோடு.
வல்லிய
மூச்சுக்காற்றின்
உஷ்ணத்தின் எதிரில்
தள்ளிய நுரையின்
குமிழ்கள் ஒவ்வொன்றாய்
உடைந்துவர....
பாம்புக்கும்
தவளைக்கும்
நடுவில் இருந்தது....
ஒரு மெல்லிய கோடு.
Friday, 13 February 2015
247.
அவள் பெயரை
எழுதினாலே
எல்லா எழுத்துகளும்
கள்ளுண்ட
குரங்காகி விடுகிறது.
247 குரங்குகள்.
காதலடி காதல்.
நான் சிந்திய
காதல் தோல்வியின்
கடைசி
கண்ணீர்த் துளியில்
இன்னொரு
காதல் விதை
முளைத்தது.
Friday, 16 January 2015
எமக்கு ஆர்வம் தமிழ்
நமக்கு
Tamil முக்கியம்.
காலைல எந்தியா
Good morning சொல்லு.
புட்டுகிட்டு போறியா
Good night சொல்லு.
தெரிஞ்சே உதைச்சியா
Sorry சொல்லு.
மன்னிச்சிடுவான்.
கேட்டதுக்கு மேல
Thousand வந்ததா?
Thanks சொல்லு.
செத்தவனுக்கு
RIP சொல்லு.
வாழறவனுக்கு வாயில
JIP போட்டு
பொறாமைப்படு.
நமக்கு
Tamil முக்கியம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)