Thursday, 11 December 2014

நதியோரம்.


நீரோடிய
நதிகளில் இன்று
மண்லாரிகள் 
ஓடுகிறது.
நதி ஓட்டத்தை
நெட்டுக்குத்தாய்
தடுத்து நிறுத்தி
மின்சாரம் எடுத்தோம்.
வறண்ட நதி
ஷாக் தருகிறது.
வீடுகட்டுகிறோம் என்ற
கான்க்ரீட் பீடைகள்
பூமி பூஜையாய்
நீராதாரங்களுக்கு
பாடை கட்டினார்கள்.
ஊருக்காய்...
பேருக்காய்...
நீருக்காய்...
தவளைக் கூச்சலிட்ட
கூட்டத்தைப் பார்த்து
வறண்ட நதி
வறட்டுச் சிரிப்பு
உதிர்த்தது.

No comments:

Post a Comment