Thursday, 11 December 2014

அழுத்தும் சோகம்.

கடந்த காலத்தின்
கற்கண்டு முகடுகளையும்
கரடுமுரடுகளையும்
கண்மூடி
தியானிக்கிறேன்.
இடிந்த பொழுதின்
மடிந்த நேரங்களும்
படிந்த சுவடுகளின்
சரிந்த வலிகளும்
மரித்துப் போகாமல்
பாசிகளாய்
படிந்து போனது.
வாழ்வாட்டத்தில்
சுகங்களை அழுத்தி
சோகங்கள்
பச்சைக் குதிரை ஆடுகிறது.

No comments:

Post a Comment