பகல்
பாலைக் குடிக்கிறது.
இரவு
கஷாயம் குடிக்கிறது.
பகல் பாண்டவர்கள்போல்
வெண்ணிற ஆடை உடுத்துகிறது.
இரவு
துரியோதனாதிகள்போல்
கருப்பு ஆடை.
பகல்
அறம் அனுசரிப்போருக்கு.
இரவு
புறம் பிழைப்போருக்கு.
பகலென்ன, இரவென்ன
பசித்தவனுக்கு
இரண்டும் ஒன்று..
பாலைக் குடிக்கிறது.
இரவு
கஷாயம் குடிக்கிறது.
பகல் பாண்டவர்கள்போல்
வெண்ணிற ஆடை உடுத்துகிறது.
இரவு
துரியோதனாதிகள்போல்
கருப்பு ஆடை.
பகல்
அறம் அனுசரிப்போருக்கு.
இரவு
புறம் பிழைப்போருக்கு.
பகலென்ன, இரவென்ன
பசித்தவனுக்கு
இரண்டும் ஒன்று..
No comments:
Post a Comment